Nagaratharonline.com
 
கொங்கரத்தி வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்  May 29, 15
 
கொங்கரத்தி வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை மகாசாந்தி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. அன்று இரவு 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மறுநாள் காலை 8 மணி முதல் விசேஷ ஹோமங்களும், மதியம் 12.30 மணிக்கு பூர்ணாஹூதி சாற்றும் முறையும் நடைபெற்றது.

கும்பாபிஷேக நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு, கோயிலில் விஸ்வரூபம் மற்றும் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.

காலை 6 மணிக்கு மேல் புண்யாகம், நித்தியஹோமம், மகாபூர்ணாஹூதி, கும்பசாமரோபனம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது.

காலை 9 மணியளவில், பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, வானில் கருடர் வட்டமிட குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெற்றது. பின்னர், சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.