Nagaratharonline.com
 
கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி  May 24, 15
 
கொப்பனாபட்டி கலைமகள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடரந்து 6ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 56 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 3 பேரும், சமூக அறிவியலில் 6 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளியின் செயலர் சிவானந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்பி. ராஜேந்திரன், தலைமையாசிரியை ஐ. வசந்தி கிளாரா ஆகியோர் பாராட்டினர்.