Nagaratharonline.com
 
திருப்பத்தூர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை  May 24, 15
 
திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான இணைப்புத் தளமாக விளங்குவது திருப்பத்தூர் பேருந்து நிலையம். இங்கிருந்து தென்பகுதியில் உள்ள அனைத்து முக்கிய ஊர்களுக்கும் 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. மேலும் திருப்பத்தூர் நகரைச் சுற்றி சுற்றுலாத் தலங்கள் அதிகமாக இருப்பதால் நகரப் பேருந்துகளும் இங்கிருந்து அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

தற்போது, இப்பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் பேருந்தை ஓட்டுநர் மெதுவாக இயக்கும் போது அவசரப்பட்டு இறங்கும் பயணிகள் பலர் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடக்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கல்லில் மோதி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நுழைவு வாயிலின் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.