Nagaratharonline.com
 
உ. சிறுவயல் தமிழ் இலக்கிய மன்றத்தின் , " தமிழ் இலக்கிய விழா"  May 15, 15
 
உ. சிறுவயல் தமிழ் இலக்கிய மன்றத்தின் 54 ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழ் இலக்கிய விழாவும், 34 ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றன.

அருள்மிகு பொன்னழகியம்மன் கோயில் மேடையில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி, மாலையில் பெண்களுக்குத் தாலாட்டுப் போட்டியும், மாணவ, மாணவிகளுக்குப் பாட்டுப் போட்டியும் நடத்தப்பட்டன.

பின்னர் நடைபெற்ற விழாவுக்கு, செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரிப் பொருளாளரும், மாத்தூர் கோயில் நகரத்தார் சங்க துணைத் தலைவருமான வயி. சின்னஅழகப்பன் தலைமை வகித்துப் பேசினார். தாம்பரம் கம்பன் கழகப் பொதுச் செயலர் கவிஞர் அரு. நாகப்பன் வரவேற்றுப் பேசினார்.

கவிஞர் ம. ராமதாசன், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், டாக்டர் விஏவி. அண்ணாமலை, ஏவி.சிடி. அழகப்பன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில், முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஏஎல். பஞ்சநாதன் நன்றி கூறினார்.