Nagaratharonline.com
 
தேவகோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை  May 8, 15
 
தேவகோட்டையிலிருந்து 39 ஆவது ஆண்டாக திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

தேவகோட்டையிலிருந்து ஆயிரம் பக்தர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர். குழுத் தலைவர் அரு. சோமசுந்தரன் தலைமையில், ஒரு வேல், ஆறு காவடிகள் எடுத்துச் சென்றனர். குழு துணைத் தலைவர் காசிநாதன் வரவேற்றார். காளையார்கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், சாயல்குடி, தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூர் சென்றடைகின்றனர்.