Nagaratharonline.com
 
NEWS REPORT: இரணியூர் கோயிலில் குபேர பூஜை  Apr 22, 15
 
இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரம்தேவி கோயிலில் அட்ஷய திரிதியையொட்டி குபேரருக்கு 108 கலச பூஜை மற்றும் லட்சுமி குபேரபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

காலை 11 மணிக்கு ஆட்கொண்டநாதர் சிவபுரம்தேவி மைய மண்டபத்திலிருந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, நகரத்தார் யாகத்திற்கான பூஜைப் பொருள்களை நாதஸ்வரம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

விநாயகர், கஜலட்சுமி,ஆட்கொண்டநாதர், சிவபுரம்தேவி, பைரவர் சுவாமிகளுக்கு பூஜைகள் செய்துவிட்டு, நகரத்தார் லட்சுமி மண்டபம் சென்றனர்.

அங்கு 108 புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வெண்பட்டால் சுற்றப்பட்டு, பூவால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

குபேரர் தங்கக்கவசத்தில் குதிரை வாகனத்தில் வீற்றிருந்தார்.

சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்கள் முழங்க கலசாபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் பூஜையும், கோ-பூஜையும் நடைபெற்றன.

பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களிலிருந்து புனித நீரால் குபேரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.