Nagaratharonline.com
 
பட்டதாரியிடம் ரூ.100 பறித்த தலைமைக் காவலர் கைது  Apr 7, 15
 
காரைக்குடியில், வாகனச் சோ தனை என்ற பெயரில் பொறியியல் பட்டதாரியிடம் ரூ.100 பணம் பறித்த தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜெயபாரதிஅறிவழகன் (26). இவர், திங்கள்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் அங்குள்ள நீதிமன்றம் வழியாகச் சென்றார். வழியில் காரைக்குடி தெற்குக் காவல் நிலையத் தலைமைக்காவலர் சண்முகராஜா (37), மற்றும் சிலர் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவதாகக் கூறி இவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஜெயபாரதியின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ரூ.100-ஐ பறித்துக் கொண்டு அவரை, அவர்கள் மிரட்டி அனுப்பியுள்ளனர். விடுப்பில் இருந்த தலைமைக்காவலர் வாகனச் சோதனை என்ற பெயரில் பணம் பறித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது காரைக்குடி வடக்குக்காவல் நிலையத்தில் ஜெயபாரதி புகார் செய்தார். இதன் பேரில், தலைமைக் காவலர் சண்முகராஜாவை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.