Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சியில் 100 சதவீதம் வரிவசூல்  Apr 3, 15
 
நெற்குப்பை பேரூராட்சியில் இணையதளம் மூலம் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

நெற்குப்பை பேரூராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவை, பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சொத்துவரி மட்டும் கடந்த 25ஆம் தேதியே நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரிவசூலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.