Nagaratharonline.com
 
NEWS REPORT: கைலாச யாத்திரை: முன்னேற்பாடுகள் தீவிரம்  Apr 2, 15
 
மத்திய அரசின் கைலாச யாத்திரை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல மேலாளர் டி.கே.சர்மா புதன்கிழமை கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான கைலாச யாத்திரை ஜூன் 8-ஆம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு முதல், வழக்கமான உத்தரகண்ட் மாநிலம் லிபுலேக் கணவாய் வழியாக மட்டுமின்றி, சிக்கிமில் உள்ள நாது லா கண்வாய் வழியாகவும் கைலாச யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது.

முதியவர்களின் வசதிக்காக அங்கிருந்து வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்த முறை சுமார் 1,330 பேர் கைலாச யாத்திரையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.