Nagaratharonline.com
 
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி  Feb 23, 15
 
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நேரு கலைக் குழுவினரின் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராம சுகாதார மையமும், பேரூராட்சியும் இணைந்து தன் சுத்தம் மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ராம. ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில் சேலம் நேரு விழிப்புணர்வு கலைக் குழுவினர், கிராமிய நாடகம் மற்றும் நாட்டிய நாடகம் மூலம் கழிப்பிடத்தின் முக்கியத்துவம், மக்கும், மக்கா குப்பைகளைப் பிரித்தல் மற்றும் டெங்கு கொசுக்களை கண்டறிந்து அழித்தல் குறித்து விளக்கமளித்தனர்.