Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் முதியோர் இல்லத் திறப்பு விழா  Jan 27, 15
 
கண்டவராயன்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள முதியோர் நல இல்லத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்டவராயன்பட்டி நகர சிவன்கோயில் அருகே நடைபெற்ற,நிகழ்ச்சிக்கு சீர்வளர்சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தலைமை வகித்தார். முன்னதாக, இவ்வமைப்பின் தலைவர் கணபதி செட்டியார் வரவேற்றார். செயலர் கே.அண்ணாமலை துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து ஏ.டி.தியாகராஜன், முத்து, சொக்கலிங்கம், ஆகியோர் பாராட்டப் பட்டனர். பின்னர் நடைபெற்ற சிறப்புரையில் மணிமேகலை பிரசுர பதிப்பாளர் ரவிதமிழ்வாணன், திருக்குறள் பேரவைச் செயலர் மேலை பழனியப்பன் மதுரை, நகரத்தார் சங்கத் தலைவர் நா.பழனியப்பன், ரா.சொக்கலிங்கம், ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியை கோவிலூர் நாச்சியப்ப கலைக்கல்லூரி முதல்வர் குமரப்பன் தொகுத்து வழங்கினார். காத்தான் அழகப்பன் நன்றி கூறினார்.