Nagaratharonline.com
 
கோவிலூர் சாதுக்கள் சமாதியில் சிறப்புப் பூஜை  Jan 25, 15
 
கோவிலூர் மடாலயத்தின் ஆதீனகர்த்தர்களாக இருந்த 11 சுவாமிகள் மற்றும் வேதாந்தம் கற்றுக்கொண்டவர்களும், சாதுக்களாக தீட்சை பெற்று முக்தி அடைந்த 25 பேரின் சமாதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. கோவிலூர் ஆதீனத்தின் சார்பில் இச்சமாதிகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அதையடுத்து ஆதீனத்தலைவர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமையில் சமாதி களில் அபிஷேகங்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் சாதுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பக்தர்களும்,கோவிலூர் மடலாய கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.