Nagaratharonline.com
 
சிறுகூடல்பட்டி விலக்கில் பைக் மீது அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் சாவு  Jan 25, 15
 
சிறுகூடல்பட்டி விலக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார்சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கீழச்சிவல்பட்டி அருகே உள்ள அரிபுரத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் மகன் முருகப்பன் (22). அதே ஊரைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் ஆனந்த் (18). இருவரும், கீழச்சிவல்பட்டியிலிருந்து தங்களது கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். சிறுகூடல்பட்டி விலக்கு அருகே சென்றபோது, சிவகங்கையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சிறுகூடல்பட்டி போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.