Nagaratharonline.com
 
தேவகோட்டை பேராசிரியருக்கு மிரட்டல்  Jan 20, 15
 
தேவகோட்டை பழ.செ.வீதியைச் சேர்ந்தவர் திண்ணப்பன் . 65. முன்னாள் பேராசிரியர். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ராம்நகரில் உள்ள இடத்தை வெங்கிடாசலம் என்பவரிடம் திண்ணப்பன் விலைக்கு வாங்கினார். இந்த இடத்தில் தனக்கு பங்கு இருப்பதாக கோவையில் வசிக்கும் பழனியப்பன் மனைவி சித்ரா தெரிவித்து அதன் பகுதி வேலாயுதப்பட்டினம் முருகேசன் என்பவருக்கு விற்கு விற்று விட்டார். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்தது. கோர்ட் உத்தரவுப்படி க ாரைக்குடி சார்பதிவாளர் கடந்த ஜூலை 2ல் கிரையம் செய்து பதிவு செய்ததை ரத்து செய்தார். இருப்பினும் முள்வேலி அமைத்து வந்தனர். இதனை திண்ணப்பன் தடுத்தார். சித்ரா, இடத்தை வாங்கிய முருகேசன், நண்பர்கள் பழனி, தமிழரசன், பாண்டியன், சித்ராவின் கணவர் பழனியப்பன் ஆகியோர் முன்னாள் பேராசிரியர் திண்ணப்பனை திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். திண்ணப்பன் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிசிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.