Nagaratharonline.com
 
திருப்புத்தூரில் முத்திரையில்லாத தராசுகள் பறிமுதல்  Jan 16, 15
 
திருப்புத்தூரில் மீன் கடைகளில் முத்திரை இல்லாத மின்னணு தராசுகளை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர்.தொழிலாளர் உதவி ஆய்வாளர் மாரியப்பன், எஸ்.ஐ.மாதவ பாலமுருகன், ஆகியோர் சிவகங்கை ரோட்டிலுள்ள மீன்கடைகளை ஆய்வு செய்தனர்.

அதில் நான்கு கடைகளில் முத்திரை இல்லாத மின்னணு தராசுகள் பயன்படுத்துவது தெரிந்தது.தராசுகளை பறிமுதல் செய்து தலா ரூ. 2500 அபராதம் விதித்தனர்.