Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் –சென்னை : பிள்ளையார் நோன்பு விழா  Dec 30, 14
 
 
 
சென்னை -41, பாலவாக்கம், 3/621, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, 27/12/2014 அன்று மாலை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள அமரபாரதி கல்யாண மண்டபத்தில் நான்காம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவை சிறப்பாக கொண்டாடியது.

திருவான்மியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் நகரத்தார்கள், தங்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டு. இழை எடுத்து, இறை அருள் பெற்றனர்.

விழாவிற்கு வந்திருந்த நகரத்தார்களை, மன்றத்தின் தலைவர், Dr. M. சீனிவாசன் P.hD, D.Sc., மற்றும் துணைத்தலைவர், Er.MR.அழகப்பன் ஆகியோர் வரவேற்றனர். மன்ற உறுப்பினர்களில் முதியவர்களான திரு. Dr. M. சீனிவாசன் P.hD, D.Sc., அவர்களும், Er.M.ராமசாமி. M.E. ( D.E., TNHB Retd.)அவர்களும் இழைகளை எடுத்துக்கொடுத்தனர்.
துணைத்தலைவர், Er.MR.அழகப்பன் மங்கலப் பொருட்களை ஏலம் விட்டபிறகு, S.சண்முகம், A.கருப்பையா, T.ஒம் கணேஷ் ஆகியோரின் உபசரிப்பில் இரவு விருந்து வழங்கப்பட்டது.


ஆ.தெக்கூர், திரு. லக்ஷ்மணன் அவர்கள் ( Paper Shoppe, Chinthathiripet, Chennai) கொடுத்தனுப்பிய "பிள்ளையார் நோன்பு" புத்தகம் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நிறைவாக, சென்னையில் தற்போது வசித்துவரும் நகரத்தார்கள் பலர் புதிய உறுப்பினர்களாக மன்றத்தில் இணைந்து கொண்டனர்.காளாஞ்சி வழங்கிய பிறகு பிள்ளையார் நோன்பு விழா இனிது நிறைவேறியது .