Nagaratharonline.com
 
காரைக்குடியில் நூல் வெளியீட்டு விழா  Dec 21, 14
 
காரைக்குடியில் காந்தியத் தொண்டர் மன்றம் சார்பில் பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு காந்தியத் தொண்டர் மன்ற செயலர் சே.நா. விஜயராகவன் தலைமை வகித்தார். எழுத்தாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா எழுதிய மகாபாரதம் மாபெரும் விவாதம் எனும் நூலை காரைக்குடி தமிழிசைச் சங்கத் தலைவர் பி.ஆர். சொக்கலிங்கம் வெளியிட அதனை தேவகோட்டை தொழிலதிபர் பெரி. மெ.ரெ. தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேராசிரியர்கள் த. ராசாராம், பத்மநாதன், அறிவொளி ஆகியோர் நூல் குறித்து பேசினர். நூலாசிரியர் பழ. கருப்பையா ஏற்புரையாற்றினார்.