Nagaratharonline.com
 
சொக்கநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி.,யினர் ஆய்வுக்கு எதிர்ப்பு  Dec 20, 14
 
சொக்கநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி.,யினர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் கேன்களுடன் கிராமத்தினர் முற்றுகையிட்டனர். ஓ.என்.ஜி.சி.,யினர் கடந்த சில நாட்களாக சொக்கநாதபுரம், வெள்ளஞ்சம்பட்டியில் ஆய்வு செய்வதற்காக வந்தனர். இதற்கு கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகளை நிறுத்தினர்.

நேற்று துணை தாசில்தார் மகாதேவன், ஆர்.ஐ.,சசிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக, கிராமத்தினர், வருவாய்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாசில்தார் கார்த்திகேயினி, இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் ஆய்வு குறித்து விளக்கம் அளித்தனர். இதில் உடன்பாடு எட்டாமல் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சமரசம் அடையாத கிராமத்தினர் மண்ணெண்ணெய் கேன்களுடன் தீக்குளிக்க போவதாக கூறியதோடு, சொக்கநாதபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். கிராமத்தினர், ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்ததால், நிறுத்தப்பட்டது.