Nagaratharonline.com
 
காரைக்குடியில் வீட்டை உடைத்து 11 பவுன் திருட்டு  Dec 16, 14
 
காரைக்குடி செக்காலை முதல் தெரு அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம்,63. இவர் தற்போது மதுரையில் குடியிருந்து வருகிறார். அவ்வப்போது காரைக்குடியில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவர் வீட்டை ஒட்டியுள்ள ஐந்து வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை, காம்பவுண்டில் குடியிருக்கும் செந்தில் பார்த்து, சொக்கலிங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்கதவை உடைத்த நபர்கள் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.