Nagaratharonline.com
 
NEWS REPORT: நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர ஆதார் எண் அவசியமில்லை: வங்கி கணக்கு கட்டாயம் தேவை  Dec 6, 14
 
ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடி காஸ் மானியம் பெற, காஸ் ஏஜென்சியிடம் படிவம் 3,4 பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் மூன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் காஸ் நிறுவனம் எஸ்.எம். எஸ் மூலம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட காஸ் எண்ணை பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் நான்கில் தனிநபர் விவரம், 17 இலக்கு கொண்ட நுகர்வோர் காஸ் எண்ணை பூர்த்தி செய்து ஏஜென்சியில் ஒப்படைக்க வேண்டும். அவற்றுக்கு ரசீது வழங்கப்படும். ஆதார் எண் உள்ள வர்கள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் கொண்டு ஏஜென்சி யில் விநியோகம் செய்யப்படும் மானிய திட்டத்துக்கான படிவம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் ஒன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதனை பெற்றுக் கொண்டு வங்கி அதிகாரிகள் ஒப்புகை ரசீதை வழங்குவார்கள்.

படிவம் இரண்டில் தனிநபர் விவரத்தைக் குறிப்பிட வேண்டும். அதே படிவத்தில் ஆதார் அட்டை நகல் எடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மட்டும்தான் ஆதார் அட்டை நகல் எடுத்து தரவேண்டும். இந்த இரண்டாவது படிவத்தை காஸ் ஏஜென்சியில் கொடுத்த பின்பு அவர்களும் ஒப்புகை ரசீது வழங்குவார்கள்.

படிவம் வாங்க செல்லும் நுகர்வோர்கள் காஸ் பில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். புகைப்படம், காஸ் பாஸ் புக் போன்றவை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. நுகர்வோர்கள் படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். காஸ் நிறுவனங்க ளின் ஆன்லைன் முகவரியிலும் படிவங்களைப் பூர்த்தி செய்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கலாம். இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள இண்டேன், இந்துஸ்தான், பாரத் ஆகிய பொதுத்துறை நிறு வனங்களின் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு பொருந்தும்.