Nagaratharonline.com
 
கொத்தமங்கலம் லட்சுமிபுரத்தில் 10 கிலோ வெள்ளி திருட்டு  Nov 25, 14
 
கொத்தமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கலா,48. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 25-ம் தேதி லட்சுமிபுரத்தில் உள்ள வீட்டுக்கு, முன்னோர் நினைவு நாளுக்கு வந்து விட்டு, திரும்பி சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள உறவினர் ஒருவர் திருமணத்துக்காக, கலாவின் வீட்டில் உள்ள விறகை, போன் மூலம் கேட்டுள்ளார். அவர் அங்கிருந்து சாவியை அனுப்பியுள்ளார். சாவியை பெற்று கொண்ட உறவினர், வீட்டை திறந்து பார்த்தபோது, உட்புறம் இருந்த அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டும், திறந்தும் கிடந்தது. இதை தொடர்ந்து கலாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது, கடந்த 25 ஆண்டுக்கு முன்பு வழங்கிய 10 கிலோ சீர் வரிசை வெள்ளி பொருட்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.