Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டியில் உலர்கள பணி நிறுத்தம்  Nov 10, 14
 
மகிபாலன்பட்டியில் வேளாண் வணிகத்துறையினர் சார்பில் கட்டப்பட்டு வந்த உலர்கள பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் மணி முத்தாறு உப வடி நிலப்பகுதியான மகிபாலன்பட்டியில் வட்டக்கிணறு,அம்மன்கோயில்,கிராமக்கணக்கு அரசு புறம்போக்கு இடத்தில், வேளாண் பொருட்களை உலர்த்துவதற்காக, உலர் களம் அமைக்க ஊராட்சியில் 2013ல் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திட்டப் பணிகளை வேளாண் வணிகத்துறையினர் துவக்கினர். அந்த இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில் இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.வேளாண் வணிகத்துறையினர் கூறுகையில், "வருவாய்த்துறையினரின் அனுமதியுடன் வேளாண் களம் ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. சிலர் இடம் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் தற்காலிகமாக பணிகள் தொடரப்படவில்லை. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீண்டும் பணி தொடரும்,' என்றனர்.