Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சி பஞ்சமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்  Nov 9, 14
 
பூலாங்குறிச்சி பஞ்சமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும், நல்லம்மை ராமநாதன் இலவச திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது.

சென்னை அபிராமி மெகாமால் மேலாண்மை இயக்குநர் அபிராமி ராமநாதன், நிர்வாக இயக்குநர் நல்லம்மை ராமநாதன் குடும்பத்தினர் பூலாங்குறிச்சியை தத்து எடுத்துள்ளனர்.
இங்கு, ரூ.1.30 கோடியில் இலவச திருமண மண்டபம் கட்டியுள்ளனர். மண்டபத்திற்கு முன் கட்டப்பட்ட வழித்துணை பஞ்சமுக விநாயகர் கோயிலில், விநாயகர் பிரதிஷ்டை செய்தனர். இங்கு நேற்று முன்தினம் மாலை முதல்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு 2ம் கால பூஜைகள் நடந்தன. காலை 7:10க்கு கும்பாபிஷேகம் நடந்தது.

பகல் 12 மணிக்கு இலவச திருமண மகாலை நல்லம்மை ராமனாதன், அபிராமி ராமநாதன், மதுரை மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் ஜெயக்கொடி, கலெக்டர் ராஜாராமன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், நகரத்தார் சங்க நிர்வாகி லட்சுமணன், சிங்காரவேலன் கோயில் அறங்காவலர் ராமநாதன், உறவினர் அண்ணாமலை, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், நடிகர் அஜய், சிட்டி ரோட்டரி கிளப் பாண்டியன், ரகு, ஊராட்சி தலைவர் ராஜா, பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கம் பழனியப்பன், சொக்கலிங்கம், விளையாட்டு குழு தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர். மீனாள் தொகுத்து வழங்கினார். பெரியகருப்பன் நன்றி கூறினார்.