Nagaratharonline.com
 
வாக்காளர் பட்டியலில் நவ. 10 வரை புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்  Nov 5, 14
 
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015 ஆம் ஆண்டில் சிறப்பு சுருக்கத் திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு பிறப்புச்சான்று, பள்ளி விலகல் சான்று, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி குறிப்பிட்ட 8ஆம் வகுப்பு, 5 ஆம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்வி அறிவற்ற ஒருவரின் வயது குறித்து பெற்றோர் அளிக்கும் உறுதி மொழி, ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர் அளிக்கும் சான்றிதழ், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிராமப் பஞ்சாயத்தால் அளிக்கப்படும் வயதுச் சான்று, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டைக்கு வழங்கப்பட்ட ஒப்பு கைச் சீட்டு, எந்த ஆவணமும் இல்லையெனில் பெற்றோர் அளிக்கும் உறுதிமொழி, ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு குருவானவரின் உறுதிமொழி, பெற்றோர் உயிருடன் இல்லையெனில் சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து, நகராட்சி உறுப்பினரிடம் பெறப்பட்ட சான்று போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.