Nagaratharonline.com
 
கொப்பனாபட்டியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.  Nov 3, 14
 
கொப்பனாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை கோழியை விழுங்கிய நிலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

கொப்பனாபட்டி வேம்பு ஊரணியின் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கிய நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் கரு. பெரியதம்பி தலைமையில் அங்கு வந்த பணியாளர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.