Nagaratharonline.com
 
NEWS REPORT: சிக்கலில் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை  Oct 29, 14
 
 
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், கந்த சஷ்டியையொட்டி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய, முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும்போது, மனிதர்களுக்கு வியர்ப்பது போல், சுவாமிக்கும் வியர்த்த மகிமை நடைபெற்றது. நாகை அடுத்த சிக்கல், சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சூரசம்ஹாரத்தின் போது, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக, கந்த புராணம் கூறுகிறது. இக்கோவில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்று முன்தினம் இரவு, அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சிங்காரவேலவர், சக்திவேல் வாங்குவதற்காக, தேரில் இருந்து இறங்கி, கோவிலுக்குள் ஆக்ரோஷத்துடன் வந்த நிகழ்ச்சி நடந்தது. சக்திவேலைப் பெற்று சன்னதியில் அமர்ந்த போது, மனிதருக்கு வியர்ப்பது போன்று, சிங்காரவேலவரின் திருமேனியெங்கும் வியர்வை அரும்பியதாகவும், முருகனின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், சன்னதி சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்ததாகவும்
பக்தர்கள் கூறினர்.