Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சியில் தனியாக இருந்த ஆச்சியின் 16 பவுன் சங்கிலி பறிப்பு  Oct 27, 14
 
பூலாங்குறிச்சியில் மூதாட்டியிடம் திங்கள்கிழமை 16 பவுன் நகை பறிக்கப்பட்டது.

பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி உமையாள் (70). இவர் தனியாக இருந்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர் வீட்டிற்குள் புகுந்தாராம்.

கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த 16 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை வீட்டினுள் வைத்து வெளியே பூட்டி விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம், இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.