Nagaratharonline.com
 
பாகனேரி பஸ்ஸ்டாண்ட் : மதுக்கடையால் பாதிப்பு  Oct 24, 14
 
பாகனேரி பஸ் ஸ்டாண்ட் அருகே மதுக்கடை உள்ளது. அரசு மருத்துவமனை, நூலகம்,காளியம்மன் கோவில் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இங்குள்ள மதுக்கடையில் பார் வசதியில்லாததால் நூலகம்,கோவில் அருகில் குடிகாரர்கள் அமர்ந்து குடிப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மாலை 6 மணி முதல் இப்பகுதியில் குடிகாரர்கள் நடமாட்ம் அதிகமாக இருப்பதால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர்.கோவில், மருத்துவமனை இருக்கும் இடங்களிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மதுக்கடை இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி கூட கடைபிடிக்கப்படாமல் கடை அமைக்கப்பட்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.