Nagaratharonline.com
 
தீபாவளி நேரம் - மின்தடை- பெண்கள் வேண்டுகோள்  Oct 18, 14
 
திருப்புத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக,அக். 20ல் மின் தடை செய்யப்பட உள்ளது.

பொது மக்கள்,தீபாவளி பண்டிகையை, செவ்வாய்க்கிழமை இரவு முதல், கொண்டாட தயாராகி வருகின்றனர். பெண்கள், புத்தாடை வாங்குதல், பலகாரம் செய்தல் போன்ற பணிகளில் மும்முரமாக உள்ளனர்.கடந்த சில நாட்களாக மழை பெய்வதால், விவசாயப் பணிகளும் துவங்கி விட்டதால், வீடுகளில் இப்பணிகள், சற்றே, தாமதமாகவே நடைபெற்று வருகிறது.திங்கள்,செவ்வாய் நாட்களில், மாவு அரைத்தல்,பலகாரம் சுடுதல் நடைபெறும். கடைகளில் வியாபாரமும் களை கட்டத் துவங்கும்.இந்நிலையில், திருப்புத்தூரில், திங்கட்கிழமையன்று, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது பெண்களை வருத்தமடையச் செய்துள்ளது.சந்தோஷமாகத், தீபாவளி கொண்டாட, வேறு தேதிக்கு மின்தடையை மாற்ற, மின்துறையினருக்கு பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.