Nagaratharonline.com
 
வலையபட்டியில் தனியாக இருந்த மூதாட்டிகளை கொன்று ரூ. 10 லட்சம் திருட்டு  Oct 17, 14
 
வலையபட்டி கைலாசபதி வீதியைச் சேர்ந்தவர்கள் க. சரஸ்வதி (68), வி. வள்ளியம்மை (73). சகோதரிகளான இருவரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் திங்கள்கிழமை வேகுப்பட்டியில் உள்ள தங்கள் நிலத்தை தனது தம்பி சிதம்பரம் மூலம் விற்றனர்.

இதையடுத்து நிலம் விற்ற பணம் ரூ. 10 லட்சத்தை அவர்கள் தங்களுடைய வீட்டில் வைத்திருந்தனராம்.

இந்நிலையில் சிதம்பரம் அவரது சொந்த ஊரான நாட்டரசன்கோட்டைக்கு சென்று விட்ட நிலையில், வெள்ளிக்கிழமை தனது சகோதரிகளுக்கு போன் செய்துள்ளார்.

தொடர்ந்து சகோதரிகள் இருவரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பொன்னமராவதி வந்து பார்த்தபோது அவரது சகோதரிகள் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

மேலும் நிலம் விற்ற பணத்தையும் காணவில்லையாம். எனவே இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஆர். கார்த்திகைசாமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.