Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி போன் "கட்'  Oct 17, 14
 
மகிபாலன்பட்டி,கண்டவராயன்பட்டி கிராமங்களில், தரை வழி போன்கள் பல செயல்படாமல், கிராமத்தினர் தகவல் தொடர்புக்கு திண்டாடுகின்றனர்.
மகிபாலன்பட்டி பி.எஸ். என்.எல். எக்ஸ்சேஞ்சில், கண்டவராயன்பட்டி, வேலங்குடி, மகிபாலன்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகளில் 150 தரைவழி போன்கள் செயல்படுகின்றன.அவற்றில் கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி பகுதிகளில் செயல்படவில்லை என்று கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இணைய சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மகிபாலன்பட்டி ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, இதே நிலை நீடிக்கிறது. புகார் தெரிவித்தால்,"லைன் பால்ட்',"நெட் பால்ட்' என்ற பதில் மட்டுமே எக்ஸ்சேஞ்சிலிருந்து வருகிறது. ஆனால் போன்கள் செயல்படவில்லை.' என்றார்.

விரைவாக நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.