Nagaratharonline.com
 
செட்டிநாட்டில் உலக உணவு தின விழா  Oct 16, 14
 
காரைக்குடி அருகே செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உணவுப் பதனிடுதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் உலக உணவு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கும், மகளிர் குழுவினருக்கும் சிறுதானியங்களின் உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சிறுதானியங்கள் மூலம் வரகு பிரியாணி, சாமை தயிர்சாதம், திணை பாயாசம், திணை அப்பம் குறித்து பல்வகை
உணவுகள் தயாரிக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில் திருமயம் மகளிர் குழுவினர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.