Nagaratharonline.com
 
கோவிலூர் நாச்சியப்பசுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு  Oct 12, 14
 
கோவிலூர் நாச்சியப்பசுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் காட்சி தகவலியல் துறை சார்பில் தகவல் ஊடகத்துறையில் இன்றைய தொழில்நுட்பம் குறித்து கருத்துப்பட்டறை நடைபெற்றது.

கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தொடக்கி வைத்தார். முதல்வர் குமரப்பன் வரவேற்றார். புகைப்படம் மற்றும் வீடியோ, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் எனும் ஐந்து பிரிவுகளில் சென்னையிலிருந்து வந்திருந்த வல்லுநர்கள் செயல்விளக்கமளித்தனர்.