Nagaratharonline.com
 
அக். 15 முதல் காரைக்குடியில் போக்குவரத்து மாற்றம்  Oct 10, 14
 
புதியபேருந்துநிலையத்திலிருந்து பெரியார்சிலை, செக்காலைச்சாலை வழியாக தேவகோட்டை, ராமேசுவரம் செல்லும் பேருந்துகள் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை பெரியார்சிலை, செக்காலை முதல்வீதி, கழனிவாசல், முதல் போலீஸ் பீட், 2-வது போலீஸ் பீட், கொப்புடையம்மன் கோயில் வழியாகச் செல்லவேண்டும்.

சிற்றுந்துகள் 2-வது போலீஸ்பீட் பாம்கோ அருகே நிறுத்திவைக்காமல் கிருஷ்ணன் கோவில் அருகே பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும். கழனிவாசல், வ.உ.சி சாலை வழியாக நகருக்குள் வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள், டிப்பர்கள் காலை 8.30 மணிமுதல் 12.30 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணிவரையிலும் வ.உ.சி சாலையில் செல்ல அனுமதி இல்லை. மாறாக ஓ. சிறுவயல் வழியாக புறவழிச் சாலையில் செல்லவேண்டும்.

திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஸ்ரீ ராம்நகர், வாட்டர் டேங்க், இன்கம்டாக்ஸ் அலுவலகம் வழியாக நகருக்குள்வரும் கனரக வாகனங்கள் வலதுபுறம் திரும்பி பெரியார் சிலை வழியாக வர அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி ஆரியபவன் வழியாகச் செல்லவேண்டும்.

செக்காலைச் சாலையில் போக்குவரத்து கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஐந்துவிளக்கு, வைரவன் அம்பலம் தெருவில் சூரியா ஹோட்டல் வரை கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்