Nagaratharonline.com
 
திருச்சி தில்லை நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி  Oct 9, 14
 
திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் சுப்பையா (52), தொழிலதிபர். இவர் வியாழக்கிழமை அதிகாலை திருச்சியிலிருந்து தனது காரில் தனது அம்மா சுசிலா (65), மனைவி உமையாள் (45), மகள் சுசிலா (24) ஆகியோருடன் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார். வழியில் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அருகே, குறுக்கே ஓடிய குரங்கின் மீது மோதாமலிருக்க காரை திருப்பிய போது சாலையோரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. அம்மா சுசிலா, உமையாள், மகள் சுசீலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுப்பையா உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.