Nagaratharonline.com
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை  Oct 6, 14
 
கோவிலூரில், கோவிலூர் மடாலயத்தின் 12ஆவது ஆதீனமும், பல்வேறு கல்வி நிலையங்களையும், பாரம்பரியக் கலைகளுக்கான பள்ளிகளைத் துவக்கியவருமான நாச்சியப்ப சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் தலைமை வகித்தார். நாச்சியப்ப சுவாமிகளின் சமாதியில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கோவிலூர் மடாலயத் தில் பயின்ற மாணவர்கள் தவில், நாதஸ்வரம் வாசித்தும், தேவாரப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் தேவாரம் பாடியும் அஞ்சலி செலுத்தினர். அருள்மிகு கோவிலூர் திருநெல்லையம்மனுக்கு தங்கக் கவச அலங்காரமும், தீபாராதனைகளும் செய்யப்பட்டன. மதியம் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காரைக்குடி திருவாசகர் பேரவையின் சார்பில் திருமுறைகள் முற்றோதலும், தேவகோட்டை ஞானதான சபையினர் சார்பில் திருவாசக முற்றோதலும் நடைபெற்றன.