Nagaratharonline.com
 
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா  Sep 29, 14
 
லையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் வே. முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் ஆர்.எம். சேதுபதி அம்பலகாரர், ராயல் அரிமா சங்கத் தலைவர் பி.எல். மாணிக்கவேல், செயலர் எஸ். திருநாவுக்கரசு, பொருளாளர் ஆர். குமரப்பன், வர்த்தகர் கழகத் தலைவர் எஸ்.கே.எஸ். பழனியப்பன், சுப்ரீம் லயனஸ் சங்க நிர்வாகிகள் சிட்டுக்கலா, கவிதா நாகம்மை, ஜெயமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இதில் கொலு வைக்கப்பட்டு நவராத்திரி பாடல்கள் பாடப்பட்டன. சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது.