Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் திருவாசக விழா.  Sep 29, 14
 
காரைக்குடி திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம், 96 ஊர் நகரத்தார் பாதயாத்திரைக் குழு சார்பில் பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் திருவாசக விழா நடைபெற்றது.

விழாவில், கவிஞர் அரு. சோமசுந்தரம் தலைமை வகித்துப் பேசுகையில், பணத்தையே முக்கியமாகக் கருதும் சமுதாயமாக நம் சமுதாயம் மாறிவருகிறது. இது நல்ல வளர்ச்சியில்லை. அதேநேரம், நாடெங்கும் இப்பொழுது திருவாசம் முற்றோதல் நடைபெறுகிறது. இதுநல்ல எழுச்சியாகும். திருவாசகம் படிப்பது நல்லது. அது நம் மனதைச் செம்மைப்படுத்தும். மனிதநேயம் ஏற்படும். மனம் பக்குவமடைந்து அமைதியான சமுதாயம் மலரும் என்றார்.

விழாவில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.

முன்னதாக பாதயாத்திரைக்குழுச் செயலர் மாணிக்கம் வரவேற்றார். சொக்கலிங்கம், சபாரெத்தினம், ஜோதி, அருணாசலம் ஆகியோர் பேசினர். முடிவில் அண்ணாமலை நன்றி கூறினார்.