Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை  Sep 24, 14
 
நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், மற்றும் வணிக வளாகங்களில் செயல் அலுவலர் வீரன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் நெற்குப்பை பேருந்து நிலைய வணிக வளாக கடைகள், எல்.எப். சாலை, கருப்பர் கோயில் சாலை, ராஜவீதி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 5 கிலோ பாலித்தீன்பை மற்றும் பிளாஸ்டிக் கப்புகள், பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.