Nagaratharonline.com
 
கீழப்பூங்குடியில் புதர்மண்டிய குடிநீர் ஊரணி: மக்கள் புகார்  Sep 20, 14
 
கீழப்பூங்குடியில் குடிநீர் ஊரணி புதர் மண்டி கிடப்பதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.

கீழப்பூங்குடியில் இருந்து கூட்டுறவுபட்டி செல்லும் மெயின்ரோட்டிற்கு அருகே குடிநீர் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இருந்து கீழப்பூங்குடி மக்கள் தண்ணீர் எடுத்து, குடிக்கவும், சமையல் தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், குடிநீர் ஊரணியை சுற்றி தடுப்புசுவர் அமைக்கப்படவில்லை. இங்கு முட்புதர்கள் மண்டி காணப்படுகின்றன. குடிநீரில் நாய்,மாடுகள் திரிவதால் இந்த நீரை பயன்படுத்தும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, குடிநீர் ஊரணியை தூர்வாரி, சுற்றுச்சுவர் கட்டி சுத்தமான ஊரணியாக வைத்திருக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.