Nagaratharonline.com
 
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வார விழா  Sep 20, 14
 
புரட்டாசி முதல் சனி வார விழாவை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சுவாமி, அம்பாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தேவகோட்டை ரங்கநாதபெருமாள் கோயில், புதுவயல் நாராயண பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயில் உட்பட அனைத்து பெருமாள் கோயில்களில் திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். * அரியக்குடி திருவேங்கமுடையான் திருக்கோயிலில், காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலசந்தி பூஜை முடிந்து சீனிவாச பெருமாள், அலமேல் மங்கை தாயாருடன், மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கொங்கரத்தி வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில், நின்ற கோலத்திலுள்ள பெருமாளை பக்தர்கள், திரளாக தரிசனம் செய்தனர். திருக்கோஷ்டியூரில், காலை 6 மணிக்கு நடை திறந்து, பக்தர்கள் சயன கோலத்தில்,சவுமியநாராயணப்பெருமாளை தரிசனம் செய்தனர். பெருமாளை, குழந்தைக் கண்ணனாகப் பாவித்து, பக்தர்கள் பொங்கல் தளிகை வைத்து வழிபட்டனர்.