Nagaratharonline.com
 
உ. சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில் திருவாசக விழா  Sep 18, 14
 
உ. சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலில் 96 ஊர் நகரத்தார் பாதயாத்திரைக்குழு, திருநாவுக்கரசர் இறைபணி மன்றம் மற்றும் உ. சிறுவயல் நகரத்தார் சார்பில் திருவாசக விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமை வகித்துப்பேசுகையில், திருவாசகம் தான் தமிழ்வேதம். மாணிக்கவாசகர் மதுரை மன்னனிடம் முதல் மந்திரியாக இருந்து தெய்வீக அனுபவம் பெற்றவர். சிவபெருமானை குருவாக அடைந்தவர். சிவனை நேரில் பார்த்தவர். சிவபெருமானின் உபதேசங்களையும், தன் அனுபவங்களையும் திருவாசகத்தில் சிறப்பாக எழுதியுள்ளார். அவை உள்ளத்தை உருக்குபவை என்றார்.

விழாவில் சாத்தப்பன் தொடக்க உரையாற்றினார். சொக்கலிங்கம், சோலையப்பன், மாணிக்கம் ஆகியோர் திருவாசகம் பற்றி பேசினர்.