Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டி ரோடு சேதம்  Sep 14, 14
 
கண்டவராயன்பட்டி - வேலங்குடி வரை ரோட்டை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருப்புத்தூரில் இருந்து கண்டவராயன்பட்டி, வேலங்குடி, செவ்வூர் வழியாக பூலாங்குறிச்சிக்கு ரோடு வசதி உள்ளது. இதில் கண்டவராயன்பட்டியில் இருந்து வேலங்குடி வரை 4 கி.மீ., தூரம் குண்டும் குழியுமாக உள்ளது. இரவில், இந்த ரோட்டில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். கண்டவராயன்பட்டி கிராமத்திற்குள் செல்லும் ரோடு, தி.புதுப்பட்டியில் இருந்து கண்டவராயன்பட்டி திரும்பும் ரோடு சேதமடைந்துள்ளன. இவற்றை செப்பனிடவேண்டும்.