Nagaratharonline.com
 
பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்  Aug 31, 14
 
நெற்குப்பை பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெற்குப்பை பேரூராட்சி பரியாமருதுபட்டியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. மருதீஸ்வரர் கோயிலின் உபகோயிலான இந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கடந்த 29.8.14 அன்று யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கபட்டது. 2 நாள்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 10.15 மணியளவில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் நெற்குப்பை, பரியாமருதுபட்டி, வேந்தன்பட்டி, பொன்னமராவதி, துவார், மற்றும் ஏனைய கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.