Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோனைக் கூட்டம்  Aug 27, 14
 
பொன்னமராவதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. இளங்கோவன் தலைமை வகித்து பேசியது:
பொன்னமராவதி காவல் உட்கோட்டத்தில் பொன்னமராவதி, காரையூர், பனையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வைத்த இடங்களில் மட்டும்தான் சிலைகள் வைக்க வேண்டும். சிலைகள் உள்ள இடத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும். அரசின் வழிகாட்டு முறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றார்.