Nagaratharonline.com
 
வேலங்குடி சுண்டக்காடு அருகே அரசுப் பேருந்து மோதி முதியவர் சாவு  Aug 27, 14
 
சுண்டக்காட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (எ) கல்யாணி(60).0 இவர் புதன்கிழமை வேலங்குடி கிராமத்திலிருந்து சுண்டக்காடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஆறுமுகம் பலத்த தலைக்காயம் அடைந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.