Nagaratharonline.com
 
கும்பகோணம் அருகே ரயிலில் அடிபட்டு 136 ஆடுகள் சாவு  Aug 24, 14
 
கும்பகோணம் அருகே, ராமேசுவரம் விரைவு ரயிலில் அடிபட்டு 136 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

சனிக்கிழமை இரவு, திருவிடைமருதூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, ஒரு பட்டியை உடைத்துக் கொண்டு வெளியேறிய ஆடுகள், அருகேயிருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளன.

நள்ளிரவு 12.30 மணியளவில், ராமேசுவரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் படுத்திருந்த 136 ஆடுகள் இறந்தன. 5 ஆடுகள் பலத்த காயமடைந்தன. விபத்தில் இறந்த ஆடுகள் ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை சிதறிக் கிடந்தன. விபத்து குறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.