Nagaratharonline.com
 
காரைக்குடியில்அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை ரெய்டு : 15 கிலோ இறைச்சி பறிமுதல்  Aug 23, 14
 
காரைக்குடியில்,நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெரியார் சிலை, ஐந்து விளக்கு பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ரெய்டு நடத்தினர்.

கெட்டுப்போன 15 கிலோ சிக்கன், அரை கிலோ இறால், இரண்டு கிலோ மீன், 10 கிலோ மசாலா பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பெரியார் சிலை அருகில் உள்ள ஓட்டலில், உணவு பொருட்கள் சமைக்கும் இடத்திலேயே கறி வெட்டி பயன்படுத்தினர். உணவு பொருளில், ரத்தம் படிவதால் நோய் உண்டாகும் நிலை ஏற்படும் என கூறி ஓட்டல் நிர்வாகத்தினர் எச்சரிக்கப்பட்டனர்.ஐந்து விளக்கு பகுதியில் உள்ள மெஸ் ஒன்றில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும்,பாமாயில் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.