Nagaratharonline.com
 
செப்., 1 முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வரி உயர்வு  Aug 23, 14
 
தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், செப்., 1ம் தேதி முதல் வாகனங்களின் கட்டணம், 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. ஏப்ரல் மாதம் தமிழகத்தில், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மீதமுள்ள, 21 சுங்கச்சாவடிகளிலும், இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.

தமிழகத்தில், உள்ள 41 சுங்கச் சாவடிகள் மூலம், நாள்தோறும் வாகன நுழைவுக் கட்டணமாக, 15 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கப்படுகிறது. சுங்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள், சாலையை பராமரிக்க போதிய அக்கறை செலுத்துவதில்லை.கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே, பல நிறுவனங்கள் குறியாக உள்ளன. இதனால், பல தேசிய நெடுஞ்சாலைகள், பள்ளம், மேடாக காட்சியளிக்கின்றன. அவற்றில், பயணிக்கும் சரக்கு வாகனங்களின் சக்கர அச்சுகள், அடிக்கடி சேதமாகும் நிலையும் ஏற்படுகிறது.