Nagaratharonline.com
 
செட்டிநாட்டில் ரூ.5 கோடியில் உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை  Aug 20, 14
 
காரைக்குடி செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தில், உணவு பதப்படுத்தும் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. இதற்கான அறிமுக விழா நேற்று நடந்தது.

தஞ்சாவூரில் மத்திய அரசுக்கு சொந்தமான, இந்திய பதப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மையம் போலவே, இந்த மையமும் அமைய உள்ளது. இதன் மூலம் உணவு பதப்படுத்துதல் குறித்த உபகரணங்கள் ஆராய்ச்சி, மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருளை தயாரிப்பது குறித்த பயிற்சி மேம்படும். முதற் கட்டமாக அரசு சார்பில் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம் ரூ.5 கோடி வரை அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது. முதற்கட்டமாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது,